ஆபத்தான குழி மூடப்படுமா?
பல்லடம் பனப்பாளையம் சோதனைச்சாவடி அருகே உயர் மின் கோபுர விளக்கின் கீழ் இந்த ஆபத்தான குழி சுமார் 5 அடி ஆழத்தில் உள்ளது. இந்த சாலை திருச்சி பிரதான நெடுஞ்சாலை ஆகும். இந்த இடத்தில் காலை,மாலை என இரு வேளைகளிலும் பொது மக்கள், பள்ளி குழந்தைகள், என பலரும் பஸ்சுக்காக காத்திருக்கும் முக்கிய பஸ் நிறுத்தம்ஆகும். எனவே பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க உடனே நகராட்சி அதிகாரிகள் இதனை பார்வையிட்டு இந்த ஆபத்தான குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன்,பல்லடம்
9578441037