சாலையில் பள்ளம்

Update: 2022-08-18 12:19 GMT
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை திருப்பத்தில் சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரிசெய்ய பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு, பணி முடிந்ததும் அதில் மண்ணை கொட்டி தார் சாலை சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் சரிசெய்யப்பட்டு 15 நாட்கள் கூட ஆகாத நிலையில் தார் சாலை உள்வாங்கி பெரிய பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்