சாலை வசதி தேவை

Update: 2022-08-11 13:43 GMT

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சுப்பிரமணியன்காடு பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள மண்பாதையை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்