சாலை பணிகள் மந்தம்; மக்கள் அவதி

Update: 2022-08-11 13:19 GMT
நாகை மாவட்டம் திருமருகல் - சியாத்தமங்கை இடையே சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணி தொடங்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை பணிகள் நிறைவடையாமல் உள்ளது. குறிப்பாக சாலை பணிகள் மந்த நிலையில் நடந்து வருகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நடந்து வரும் சாலை பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்