தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-08-11 12:42 GMT
திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் காருகுடி பிரிவு ரோடு அருகே சாலையின் 2 பக்கத்திலும் உள்ள வேகத்தடைக்கு வெள்ளை வர்ண கோடுகள் அழிந்து விட்டதால் விபத்துகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் வேகத்தடைக்கு வெள்ளை வர்ண கோடுகள் அடிக்கவேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ண கோடுகள் பூசினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்