சேலம் புதிய கந்தப்பன் காலனியில் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. அங்கு மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை சாலை அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைத்து தர வேண்டும்.