விபத்து தடுப்பு சுவர் தேவை

Update: 2022-08-11 07:47 GMT

விவேகானந்தபுரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் சாலையில் சுக்குபாறை தேரிவிளை ெரயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டின் மேற்கு புறத்தில் உள்ள சாலையில் கல்லூரி மாணவ-மாணவிகள், தங்களது வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலையின் இரு புறங்களிலும் பெரிய பள்ளம் உள்ளது. ஆனால், சாலையின் இருபுறமும் விபத்து தடுப்பு சுவா் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகள் நலன் கருதி சாலையோரத்தில் விபத்து தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ச.ராம்தாஸ், சந்தையடி.


மேலும் செய்திகள்