சென்னை ஆயிரம் விளக்கு, தர்மபுரம் மெயின் ரோட்டில் கடந்த 3 மாதமாக மழைநீர் வடிகால் வேலை நடைபெற்று வருகிறது. மிக மந்தமாகவும், மற்றும் பழைய கால்வாயை அப்புறப்படுத்திவிட்டு புதிய கால்வாய் அமைக்கும் பணி சரியான முறையில் நடைபெறுவதில்லை. இதே நிலை தொடர்ந்தால் மழைநீர் வடிகால்வாய் தரமானதாக இருக்குமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. எனவே இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?