ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளம் விழுந்து காணப்படுகிறது. இந்த பள்ளங்களினால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும்முன் சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய வேண்டும்.