போக்குவரத்து இடையூறு

Update: 2022-08-07 12:53 GMT
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வடசேரி ரோடு, செட்டியார் தெரு, வடக்கு தெரு, பிள்ளையார் கோவில் தெரு, தபால் நிலைய சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை அவ்வப்போது முட்டிவிடுகின்றன. மேலும், இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்துக்கொள்கின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்