திருமங்கலம் பாலம் அருகே இருக்கும் பிரபல பள்ளியின் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் நடைபாதையில் நடக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். விரைவில் பள்ளிகள் திறக்க இருப்பதால் மாணவ மாணவிகள் நடைபாதையை பயன்படுத்தும் சூழல் ஏற்படும். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.