மதுரை சித்திரகார தெரு பகுதியில் தார் சாலை இல்லாமல் மண் சாலையாகவே உள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.