சேறும்,சகதியுமான சாலை

Update: 2022-08-02 13:04 GMT
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த பெருங்குடி குளக்கரை பகுதியில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், கிராம சுகாதார துணை நிலையத்துக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சேறும், சகதியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்