சிவகங்கை மாவட்டம் குன்றங்குடி அருகே விறியன்பட்டி கிராமத்தில் குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக சாலையானது தோண்டப்பட்டது. இந்நிலையில் தோண்டிய சாலை மூடப்படாததால் இப்பகுதி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோண்டிய சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.