சென்னை ஆவடி காந்தி நகர், சண்முகம் தெருவில் உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் இந்த பகுதியை கடந்து செல்லவே மக்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.