திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெரியசிங்களாந்தி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.