மூடப்படாத குழியால் விபத்து அபாயம்
திருப்பூர் எம்.எஸ்.நகர். 17-வது வார்டில் கொங்குமெயின்ரோடு முடியும் இடத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் இருக்கின்றது. இந்த குழி கடந்த 3 மாதங்களாக மூடப்படாமல் இப்படியே கிடக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு முதியவர் விழுந்து காயம் அடைந்தார். மேலும் குடிபோதையில் வந்த ஒருவரும் விழுந்து எழுந்து சென்றார். எனவே சம்பந்தப்பட்ட திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் பெரிய விபத்து ஏற்படும் முன்பு இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.ரஞ்சித்குமார். எம்.எஸ்.நகர்.