மதுரை மாவட்டம் கிருஷ்ணாநகர் அய்யர்பங்களா மலர்மாளிகை பகுதியில் குடிநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாயில் இருந்து தண்ணீர் கசிந்து சாலையில் வெளியேறி வருகிறது. சாலையும் முற்றிலும் சேதமடைந்து மண் சாலையாக மாறி வருகிறது. இதனால் சாலையில் பாதசாரிகள் நடக்கவும், வாகனங்கள் பயணிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்யும் மழையின் காரணமாகவும் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. எனவே தண்ணீர் வெளியேறுவதை தடுக்கவும், சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.