தேனி அருகே கொடுவிலார்பட்டியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், சாலையோர பகுதிகள் குப்பைக் கிடங்கு போல் மாறியதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பைகளை அப்புறப்படுத்துவதோடு, சாலையோரம் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.