விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் ஆலங்குளம் அருகே ஆனந்தப்பநாயக்கன்பட்டியில் இருந்து சாமிநாதபுரம் செல்லும் சாலையில் தரைப்பாலம் உள்ளது. மழைக்காலங்களில் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.