சென்னை கீழ்க் கட்டளை காந்தி நகர் விநாயகர் காலனி தெருக்களில் கால்நடைகளின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதசாரிகளும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் இந்த சாலையில் பயணம் செய்யவே மிகுந்த சிரமப் படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.