சென்னை தியாகராயநகர் பிரபள ஜவுளிக்கடை அருகில் இருக்கும் பிஞ்சாலா சுப்பிரமணியன் தெருவில் கட்டுமான பணிக்கு தேவையான கம்பிகள் சாலையிலேயே போட்டு வைத்துள்ளது தொடர்பான செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் புகாராக வெளியானது. இந்தநிலையில் சாலையை அடைத்தவாறு போடப்பட்டுள்ள கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், இதற்கு காரணமாக இருந்த 'தினத்தந்தி'க்கும் சாலைவாசிகள் பாராட்டை தெரிவித்தனர்.