மதுரை மாவட்டம் மாட்டுதாவணி ஆம்னி பஸ் நிறுத்தம் சிக்னல் அருகே சிறிய மழை பெய்தால் கூட சாலையில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகனங்களை இயக்கவும், சாலையில் நடக்க முடியாமலும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் நடைபாதையினர் மீது மழைநீரை வாரியிறைக்கிறது. எனவே பொதுமக்கள் செல்லும் வகையில் சாலையில் பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.