வேகத்தடை அமைக்கவேண்டும்

Update: 2022-07-27 11:44 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமத்தில் நடுக்கடை-குத்தாலம் மெயின் சாலையில் அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் சாலையைக் கடக்கும் போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி வாகனங்கள் அதிவேகமாக சென்று வருவதால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குழந்தைகள், பெரியவர்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


பொதுமக்கள்,






மேலும் செய்திகள்