மீண்டும் வேகத்தடை அமைக்க கோரிக்கை

Update: 2023-09-17 17:24 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் பஸ் நிலையம் பகுதியில் தாலுகா அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, போலீஸ் நிலையம், வங்கி மற்றும் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. மிக முக்கிய போக்குவரத்து உள்ள இந்த பகுதியில் வங்கி எதிரில் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் வேகமாக செல்லும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்