சேறும், சகதியுமான சாலை

Update: 2023-09-17 11:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குளத்தூர் நாயக்கர்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த குருங்குலம் சர்க்கரை ஆலைக்குச் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் வடபுறமாக செல்லும் பழைய கோபால் நகர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழை பெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்