புவனகிரி அருகே மஞ்சக்கொள்ளை- வத்தராயன்தெத்து செல்லும் சாலை பலத்த சேதமடைந்து கரடு, முரடாக உள்ளது. இது குறித்து புகார் அளித்தும் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் இந்த சாலை வழியாக வாகனத்தில் செல்ல பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.