சாலை வசதி வேண்டும்

Update: 2023-09-10 12:44 GMT

தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி, சிதம்பர சீனிவாசநகர் விரிவாக்க பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதையில் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மண்பாதையை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்பாகும்.



மேலும் செய்திகள்