ஆபத்தான வளைவு

Update: 2023-09-03 16:21 GMT

அரியாங்குப்பம் அடுத்த ஓடைவெளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக சின்னவீராம்பட்டினம் கிராம மக்கள் ஈடன் கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்த ரோட்டில் ஆபத்தான வளைவில் எந்தவித எச்சரிக்கை பிரதிபலிப்பான் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலையோரத்தில் உயிர்பலி வாங்குவதற்காக சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. அந்த சாக்கடை கால்வாயை மூடவும், விபத்தை தடுக்க எச்சரிக்கை பிரதிபலிப்பான் வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்