சாலையோரத்தில் இடையூறாக விளம்பர பேனர்கள்

Update: 2023-09-03 10:51 GMT

கும்பகோணம் தாராசுரம் அண்ணா சிலை அருகே சாலையோரத்தில் இடையூறாக விளம்பர பேனர்கள் அதிகளவில் வைக்கப்படுகின்றன. இதனால் எதிர்புறம் வரும் வாகனங்களை வாகன ஓட்டிகள் பார்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், பலத்த காற்று வீசும் போது விளம்பர பேனர்கள் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மீது விழும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்