சாலையின் நடுவே கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள்

Update: 2023-08-23 14:35 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உள்ள தார் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடந்தது. இந்த சாலை பல வீடுகளுக்கும், தோட்டங்கள், மயானத்திற்கும் செல்லும் வழியாக உள்ளது. தற்போது சாலை சீரமைப்பிற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜல்லிகற்கள் கொண்டு வந்து சாலையில் முழுமையாக கொட்டி குவித்து வைக்கப்பட்டுள்ளதால் அந்த வழியாக பொதுமக்கள் தோட்டங்களுக்கோ, மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கோ சென்று வரமுடியாமல் தவித்து வருகின்றனர். ஆகவே சாலையில் கொட்டி குவிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கற்களை உடனே ஓரமாக அகற்றி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்