ஜல்லிக்கொட்டியாச்சு... சாலை அமைக்கலயே...

Update: 2023-08-20 17:54 GMT
புவனகிரி ஒன்றியம் பு.சித்தேரி மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. இருப்பினும் தற்போது வரை மேற்கொண்டு பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஜல்லியில் வழுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்