உயர்மட்ட பாலம் தேவை

Update: 2023-08-13 18:03 GMT

திருவேங்கடம்- ராஜபாளையம் சாலையில் குலசேகரன்கோட்டை நிட்சேபநதியின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. இந்த பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மழைக்காலத்தில் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்லும்போது போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. மேலும் சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்