திருச்சி மாவட்டம், வயலூர் சாலை உய்யகொண்டான் திருமலை மெயின் ரோடு சண்முகா நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து மேற்கு பகுதி சண்முகா நகர் பஸ் நிறுத்தம் வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலை ஓரம் கோவில்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் ஆகியவை உள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முக்கியமான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.