சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கருமந்துறை பகுதியில் பொது மயானத்துக்கு செல்லும் வழியில் சாலை போடுவதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ஜல்லி கற்கள் பரப்பப்பட்டது. அதன்பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை. தற்போது இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், கால்நடை ஆஸ்பத்திரிக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக சாலை அமைத்து தர வேண்டும்.
-பூவேஷ், சேலம்.