குண்டும், குழியுமான சாலை

Update: 2023-08-06 11:33 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியம், இரும்பாநாடு பஞ்சாயத்து கோரக்கன்வயல் செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சில நேரங்களில் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்