கடலூரிலிருந்து நெல்லிக்குப்பம் வழியாக மடப்பட்டு வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் நெல்லிக்குப்பம் நகர பகுதியில் சாலை அமைக்கும் பணி மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.