வேகத்தடை வேண்டும்

Update: 2023-07-26 17:40 GMT

ஈரோடு மாநகராட்சி சென்னிமலை ரோடு கே.கே.நகர் பகுதியில் ரோடு மிகவும் வளைவாக உள்ளது. ஆபத்தான வளைவாக இது உள்ளது. சென்னிமலை ரோட்டில் செல்லும் வாகனங்கள், கே.கே.நகர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் என இங்கு அதிக வாகனப்போக்குவரத்து உள்ளது. ஆனால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே கே.கே.நெகர் சாலை வளைவு பகுதியில் வேகத்தடை அல்லது வேகத்தடுப்பு கம்பி வேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்