வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

Update: 2023-07-26 12:48 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் தா.பழூர் சாலையில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று திசைகளான சிதம்பரம், திருச்சி, விருத்தாச்சலம் உள்ளிட்ட சாலைகளில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலைகளில் வரும் வாகனங்கள் அதிவேகமாக வரும்போது ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் விடுபட்டுள்ள மற்ற மூன்று சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்