புழுதி பறக்கும் சாலையால் அவதி

Update: 2023-07-23 15:53 GMT
திண்டிவனம்-மரக்காணம் 4 வழிச்சாலையில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாகனங்கள் செல்ல அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலையில் அதிகமாக புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகளுக்கு கண்எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையில் தினசரி தண்ணீர் ஊற்றி புழுதி பறக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்