சாலை வசதி இல்லை

Update: 2023-07-23 15:52 GMT
உளுந்தூர்பேட்டை அருகே புதுத்தெருவில் இருந்து கந்தசாமிபுரத்திற்கு செல்லும் வழியில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக தார்சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்