இருளில் மூழ்கிய சாலை

Update: 2023-07-19 17:49 GMT
உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி செல்லும் சாலையின் ஓரத்தில் போதுமான அளவிற்கு தெரு மின்விளக்குகள் இல்லாமலும், சில இடங்களில் மின்விளக்குகள் இருந்தும் எரியாமலும் காணப்படுகிறது. இதனால் இரவில் சாலை இருளில் மூழ்கி கிடப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். மேலும் இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது. இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்