சாலையோரத்தில் பள்ளம்

Update: 2023-07-19 11:28 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி நந்தன வயல் அருகில் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையோரத்தில் பள்ளமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையோரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்