சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-07-12 16:18 GMT
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் சாலை ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்