சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் கோவில் அருகில் உள்ள சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மழை காலங்களில் சாலை மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீா்செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.