சாலை ஆக்கிரமிப்பால் ேபாக்குவரத்து நெரிசல்

Update: 2023-07-12 10:03 GMT

திருப்பூர்- மங்கலம் சாலை கருவம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி முன்பாக சாலையை ஆக்கிரமித்து கான்கிரீட் தளம் அமைத்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்