விவசாயிகள் அவதி

Update: 2023-07-05 12:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, முத்தானிப்பட்டியில் இருந்து கல்லுமடை செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாமல் குண்டும், குழியுமாக தற்போது மண் சாலைபோல் மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாததால் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் விவசாய இடுபொருட்களை வயலுக்கு கொண்டு செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லவும் முடியாமல் விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்