சேறும், சகதியுமான சாலை

Update: 2023-07-02 13:28 GMT

அரியலூர் மாவட்டம், வீ.கைகாட்டியில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் சின்ன நாகனூர் பாதையில் இருந்து அஸ்தினாபுரம் பஸ் நிலையம் வரை சுண்ணாம்புக்கல் துகள்கள் சாலையில் கொட்டுவதால் தற்போது மழை காலம் துவங்கிவிட்ட நிலையில், அதன் மீது மழை பெய்யும்போது அவ்வழியாக செல்லும் வாகனங்களினால் அந்த சாலை சேறும், சகதியுமான சாலையாக மாறிவிடுகிறது. இதனால் இந்த வழியாக சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்