நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-07-02 08:24 GMT

நடவடிக்கை எடுக்க வேண்டும்

குலசேகரம் நகரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்து நகரமாக மாறி வருகிறது. இப்பகுதியில் ஆடுகள் வளர்க்கும் சிலர் ஆடுகளை கொட்டகையில் கட்டி வளர்க்காமல் மேச்சலுக்காக திறந்து விட்டு விடுகின்றனர். இதனால் அந்த ஆடுகள் கூட்டமாக பிரதான சாலையில் வருகின்றன. சாலையில் ஆடுகள் தாறுமாறாக செல்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே குலசேகரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் சாலையில் உலாவும் ஆடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவ சகாயம்

அரசமூடு

மேலும் செய்திகள்