மழைநீர் வடிகால் வேண்டும்

Update: 2022-07-23 16:06 GMT
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகே உள்ள சாலையில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி மின்கம்பிகள் அறுந்து மழைநீரில் விழுந்து அசம்பாவிதம் எதுவும் ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்